"ஓணம் பண்டிகையில் யாரும் பட்டினியாக இருக்க கூடாது.." - கேரள அரசுக்கு பறந்த உத்தரவு

Update: 2023-08-17 06:16 GMT

ஓணம் பண்டிகையின்போது யாரும் பட்டினியாக இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ள கேரள உயர் நீதிமன்றம், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவருக்கும் முழு சம்பளத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாததால், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இதனிடையே இது தொடர்பான மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஓணம் பண்டிகைக்கு முன்னதாக முழு ஊதியத்தையும் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்