குளத்துக்குள் பாய்ந்த லாரி - துரிதமாக மக்கள் எடுத்த முடிவு

Update: 2024-04-23 11:00 GMT

கன்னியாகுமரியில், கட்டுப்பாட்டை இழந்து கனரக லாரி குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு கயிறு மூட்டைகளை ஏற்றிச் சென்ற கனரக லாரி, இரணியல் ஆழ்வார்கோவில் குளத்தன்கரை பகுதியை கடந்து செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய லாரி ஓட்டுநர் வினு மற்றும் கிளீனர் ஆனந்த் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்