ஆந்திர முதல்வர் மீது நடந்த தாக்குதல் சம்பவம் - முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

Update: 2024-04-14 02:29 GMT

ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு தாக்குதலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது என்றும், ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்