ஜெகன், சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Update: 2024-05-07 07:43 GMT

ஜெகன், சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் தேர்தல் பிரச்சார உரைகளில் கவனத்துடன் செயல்படுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புகார்கள் எழுந்த‌து. இது தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மற்றும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில், தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், இருவரும் வரும் காலங்களில் தங்கள் தேர்தல் பிரச்சார உரைகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்