ஒரு நாள் பகட்டுக்காக இடித்து நொறுக்கப்படும் ஏழைகளின் மாளிகைகள் - டெல்லியில் அரங்கேறிய சோக காட்சிகள்

Update: 2023-09-08 07:18 GMT

டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதையொட்டி குடிசை பகுதி வீடுகள் இடிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். சாலையோரம்

ஆக்கிரமித்து கட்டபட்ட குடிசை வீடுகள்

ஜேசிபி இயந்திரங்களை கொண்டு இடித்து அகற்றப்பட்டன. இதனால் அங்கு வசித்த

மக்கள் கண்ணீருடன் தங்கள் உடமைகளை

கொண்டு சென்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் 50க்கும் மேற்பட்ட குடிசை பகுதிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இடிப்பு நடவடிக்கையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்