டி.கே.சிவக்குமாரின் பேச்சுக்கு ஈபிஎஸ் கண்டனம்

Update: 2024-03-12 02:56 GMT

"தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை" எனக்கூறிய, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமாரின் பேச்சுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் கருத்து, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளில், தேசிய கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி விவகாரத்தில், தமிழக அரசு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து, காவிரி மீதான நமது உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்