எதிரி நாடுகளை வாயை பிளக்க வைத்த உள்நாட்டு தயாரிப்பு - டி.ஆர்.டி.ஓ வெளியிட்ட தகவல்

Update: 2024-04-19 02:34 GMT

எதிரி நாடுகளை வாயை பிளக்க வைத்த உள்நாட்டு தயாரிப்பு - டி.ஆர்.டி.ஓ வெளியிட்ட தகவல்

#india | #indianarmy | #thanthitv

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை, ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த சோதனையை நடத்தியுள்ளது. ரேடார், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம், டெலிமெட்ரி போன்ற பல்வேறு சென்சார்களால் ஏவுகணையின் செயல்திறன் கண்காணிக்கப்பட்டது. மேலும்,, இந்திய விமானப்படையின் சுகோய் -30 எம்கேஐ போர் விமானத்தில் இருந்தும் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. சோதனை வெற்றி அடைந்த‌தற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்