ரூ.34,400 கோடியும் பிரதமர் மோடியும்.. சத்தீஸ்கரில் இன்று..

Update: 2024-02-24 02:23 GMT

'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காணொலி கட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.

சத்தீஸ்கரில் 34 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். சாலைகள், ரயில்வே, நிலக்கரி, மின்சாரம் மற்றும் சூரியசக்தி போன்ற முக்கிய துறைகளின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும், தேசிய அனல் மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம் தொகுப்பு-1 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், தேசிய அனல் மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் கழகத்தின் தொகுப்பு-2 திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்