வீட்டை விட்டு ஓடி போய் திருமணம்... பிரிக்க வந்த உறவினர்கள் - இறுக கட்டி பிடித்துக்கொண்ட ஜோடி

Update: 2024-03-07 15:38 GMT

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜோடியை உறவினர்கள் பிரிக்க முயன்றபோது காதலர்கள் விடாமல் ஒருவரையொருவர் இறுகப் பற்றிக்கொண்டனர். உமேஷ் யாதவ் - வர்ஷா குமாரி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். உறவினர்கள் இருவரையும் பிரிக்க முற்பட்டபோது, உமேஷை ஆரத்தழுவிக்கொண்டு வர்ஷா விலக மறுத்தார். இருவரும் மேஜர் என்பதால் போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்