தொழிலதிபரை மயக்கிய தமிழக நபர்..ஒரு வார்த்தைக்கு ரூ.70 லட்சம் - மிரண்டுபோன பெங்களூரு போலீஸ்

Update: 2024-04-20 08:16 GMT

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி செய்ய முயன்று தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவின் எடியூர் ஏரி அருகே, தொழிலதிபர் ஒருவரிடம் இரிடியம் குறித்தான ஆசை வார்த்தைகள் கூறிய மூவரும், அதனை வாங்கி வீட்டில் வைத்தால் பல கோடி ரூபாய் வருமானம் வரும் எனவும் கூறி வலை விரித்திருக்கின்றனர். இரிடியம் பெயரில் தாமிர பாத்திரத்தை ரூபாய் 70 லட்சத்துக்கு கும்பல் பேரம் பேசி விற்ற நிலையில், மூவரையும் சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் மற்றும் தாமிர பாத்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்