புத்தாண்டு அன்று பறிபோன 62 உயிர் - பிரதமர் போட்ட கடிதம்

Update: 2024-01-05 13:36 GMT

புத்தாண்டு அன்று பறிபோன 62 உயிர் - பிரதமர் போட்ட கடிதம்

ஜப்பான் நாட்டிற்கு இயன்ற அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.கடந்த 1 ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். இந்நிலையில் ஜப்பானில்பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு, பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில்,

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அறிந்து மிக வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,

ஜப்பான் நாட்டிற்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்