மும்பை விமான நிலையத்தில் தீ விபத்து

மும்பை விமான நிலையத்தில் விமானம் அருகே பயணிகளின் உடமைகளை எடுத்து செல்லும் இழுவை இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-10 18:43 GMT
மும்பை விமான நிலையத்தில் விமானம் அருகே பயணிகளின் உடமைகளை எடுத்து செல்லும் இழுவை இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜாம்நகர் செல்லும் ஏர் இந்தியா விமானம் 86 பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது, விமானம் அருகேயே பயணிகளின் உடமைகளை எடுத்து செல்லும் இழுவை இயந்திரத்தில் தீப்பிடித்து அதில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விரைந்து அணைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்