கேரள தங்க கடத்தல் வழக்கு - முதன்மை குற்றவாளிகள் 4 பேருக்கு ஜாமின்
கேரள தங்க கடத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளியான சரித், ரமீஸ், ஜலால் மற்றும் முகமது ஷபி ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில், பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, முதன்மை குற்றவாளிகளான சரித், ரமீஸ், ஜலால் மற்றும் முகமது ஷபி ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், 4 பேரும் பூஜாப்புரா மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சரித், ரமீஸ், ஜலால் மற்றும் முகமது ஷபி ஆகியோர், ஒரு வருடம் நான்கு மாதங்களுக்குப் பிறகு, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.