கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் - வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத்
விவசாயிகளின் பிற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் விவசாயிகள் சங்க தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும், லக்கிம்பூர் வன்முறையில் அமைச்சர் அஜய் மிஷ்ராவை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத், கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயிகள் வீடு திரும்ப மாட்டார்கள் என கூறினார்.