"தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது" - மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் பதில்

புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பதில் அளித்துள்ளார்.

Update: 2021-10-16 04:02 GMT
தேர்தல் நடத்தை விதிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும், தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ்,  புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மட்டுமே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். தேர்தலுக்கு தடை விதிக்காத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த முடியாது என்றும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வராமல் எந்த வித நடவடிக்கைகளையும் மாநில தேர்தல் ஆணையம் எடுக்க இயலாது தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்