இளைஞர் வெட்டிக்கொலை - குற்றவாளிகள் காவல்நிலையத்தில் சரண்

கேரளா மாநிலம் கோட்டயத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக்கொன்ற 2 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்

Update: 2021-10-08 06:20 GMT
கேரளா மாநிலம் கோட்டயம் எடையப்பரா சந்திப்பில் இன்று மதியம் வெட்டப்பட்ட கால்  ஓன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர்  தூரத்திலுள்ள   ரப்பர் தோட்டத்தில் இளைஞர் ஒருவரது உடல் கழுத்து மற்றும் உடலில் வெட்டுக்காயங்களுடன் உடல் காணப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்  பதானத்தை  சேர்ந்த மகேஷ் தம்பன் என்று தெரியவந்த நிலையில்கொலை செய்ததாக இரண்டு பேர் மணிமலை காவல் நிலையத்திற்கு சரணடைந்தனர். முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்ததாக சரணடைந்த ஜெயேஷ் மற்றும் சச்சு ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்