திருப்பதி கோயில் அறங்காவலர் குழு - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக 52 பேரை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-22 11:10 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 81 பேர் கொண்ட அறங்காவலர் குழுவிர்  52 பேர் சிறப்பு அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இதுகுறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் பாஜகவினர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி, 52 பேர் கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அரசாணையை நான்கு வாரங்களுக்கு ரத்து செய்வதாக உத்தரவிட்டது.


Tags:    

மேலும் செய்திகள்