கொரோனா இரண்டாவது அலை - நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் பலி

கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-05 13:48 GMT
கொரோனா இரண்டாவது அலை - நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் பலி 

கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக  இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதில் தலைநகர் டெல்லியில் 109 மருத்துவர்களும், அடுத்தப்படியாக பீகார் மாநிலத்தில் 97 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 79 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 43 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 39 வேரும் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 35 மருத்துவர்கள், தெலுங்கானாவில் 34 பேரும், ,குஜராத்தில் 37 பேரும் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் 30 மருத்துவர்களும், தமிழ்நாட்டில் 32 மருத்துவர்களும் இரண்டாவது கொரோனா அலையில் பலியாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்