கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு : 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை அடுத்து 9 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-06 11:04 GMT
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை அடுத்து 9 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் இதுவரையில் இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு 41 ஆயிரத்து 953 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை என நிபுணர் குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அப்போது அக்குழு தாக்கல் செய்த பரிந்துரையின்படி 9 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்