ஆந்திராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடால் 8 பேர் பலி

ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-05-03 16:37 GMT
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் குறைபாடு காரணமாக அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்ததால் அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதோடு மருத்துவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆக்சிசன் குறைபாடு ஏற்பட்டதால் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்