18 வயது முதல் தடுப்பூசி - இணையத்தில் துவங்கியது முன்பதிவு

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான முன்பதிவு துவங்கியது.

Update: 2021-04-28 17:55 GMT
இந்தியாவில், 18 வயது மேற்பட்டோர் இன்று மாலை 4 மணி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, மே 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக, Cowin இணையதளம், ஆரோக்கிய சேது செயலி மற்றும் UMANG செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ பதிவு துவங்கியது. பதிவு செய்து கொண்ட பிறகு, பயனாளிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் விவரம், அந்தந்த மாநிலங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் துறை தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை பொறுத்தே  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 
இணைய தளத்தை பலரும் ஒரே நேரத்தில் உபயோகப்படுத்த தொடங்கியதன் காரணமாக, பல இடங்களில் இணையதளம் முடங்கியதாக, புகார் எழுந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்