"என்ன செய்வதென்று தெரியவில்லை; ஆதரவின்றி நிற்கதியாக நிற்கிறோம்" - மக்களுக்கு மருத்துவர் கண்ணீர் கோரிக்கை

முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடியுங்கள் என மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் திருப்தி கிலாடா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-04-21 10:26 GMT
முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடியுங்கள் என மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் திருப்தி கிலாடா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு வீடியோவில் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லை என்றும் ஆக்சிஜன் இல்லை என்றும் கூறியுள்ளார். தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஆதரவின்றி நிற்கதியாக நிற்கிறோம் என கண்ணீர் மல்க கூறியிருக்கும் திருப்தி கிலாடா, தங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்