"கொரோனா பரவலுக்கு மத்திய அரசே காரணம்" - சிவசேனா குற்றச்சாட்டு

கொரோனா 2-வது அலைக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையமே காரணம் என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2021-04-18 06:54 GMT
கொரோனா 2-வது அலைக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையமே காரணம் என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.  சமீபத்தில் தேர்தல் நடந்த மற்றும் நடக்க இருக்கும் மாநிலங்களில் மற்ற பகுதிகளை விட அதிவேகமாக கொரோனா தொற்று பரவுகிறது என சிவசேனா கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன், உயிர்க்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவும் சூழலில் மத்திய அரசு மேற்கு வங்க தேர்தல் பணிகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்