சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு : "இருவரின் வளர்ச்சிக்கு, மக்களிடம் கொள்ளை" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கடந்த 10 நாட்களில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இரு முறை உயர்த்தப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-15 07:07 GMT
கடந்த 10 நாட்களில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இரு முறை உயர்த்தப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், கடந்த 4 ஆம் தேதி 25 ரூபாய் என்றும், இன்று 50 ரூபாய் என மொத்தம் 75 ரூபாய், விலை உயர்த்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இருவரின் வளர்ச்சிக்காக மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்படுகிறது என்றும் ராகுல்காந்தி தமது பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்