3 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த தந்தை - போக்சோ சட்டத்தில் கைது - போலீஸ் விசாரணை

புதுச்சேரியில்16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-07-28 04:09 GMT
புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். காயங்களை பார்த்து, சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காயமடைந்த மாணவி மற்றும் அவரின் தாயிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் தாய் 2-வது திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், முதல் கணவருக்கு பிறந்த அந்த சிறுமியை, தாய்க்கு தெரியாமல் 3 ஆண்டுகளாக 2 வது கணவர், பாலியல் வல்லுறவு செய்ததும் தெரியவந்தது. சிறுமியை கட்டி வைத்து கையை உடைத்தும், அந்தரங்க இடங்களில் சூடு வைத்தும், தலையில் அடித்தும் காயம் ஏற்படுத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து, உடனடியாக, தாயின் 2-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அந்தக் காமக் கொடூரன், தனக்கு பிறந்த 3 மகள்களையும் கொடுமைக்குள்ளாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்