முக கவசம் அணியாமல் வெளியே சுற்றிய வாலிபர் : போலீஸ் அதிகாரி தாக்கியதில் வாலிபர் உயிரிழப்பு

ஆந்திராவில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றிய வாலிபரை , போலீஸ் அதிகாரி தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-07-22 15:13 GMT
ஆந்திராவில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றிய வாலிபரை , போலீஸ் அதிகாரி தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாசம் மாவட்டம் , சீராலா நகரை சேர்ந்த கிரண் குமார் , கடந்த 19ம் தேதி முக கவசம் அணியாமல் வெளியே சுற்றி உள்ளார், அதற்காக சீராலா காவல் நிலைய துணை ஆய்வாளர் விஜயகுமார் , அவரை காவல் நிலையம் அழைத்து சென்று கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. குண்டூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரண் குமார், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்