"இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதே?" - மோடி ஆட்சி குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2020-07-12 12:30 GMT
மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அவர், இந்திய-சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளித்து வருவதாக ஆங்கில இணையதள பத்திரிகைக்கு கர்னால் அஜய் சுக்லா அளித்த பேட்டியை  சுட்டிக்காட்டி, மோடி ஆட்சியில் இந்தியாவின் புண்ணிய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதே என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்