"கேரளாவில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளதாக கூறினார். இதுவரை ஆயிரத்து 888 குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறினார். வெளிநாட்டிலிருந்து 72 விமானங்களில் 14 ஆயிரத்து 58 பேர் நேற்று கேரளா வர உள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.