ஜூன் 30 வரை பொது இடங்களில் கூடக்கூடாது - உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரபிரதேச மாநிலத்தில் ஜூன் 30ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூட அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-04-25 10:22 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் ஜூன் 30ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூட அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். நாடு தழுவிய ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், மாநிலத்தில்  ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். பொது கூடுகைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. 
Tags:    

மேலும் செய்திகள்