சிஏஏ ஆதரவாளர் - எதிர்ப்பாளர் இடையே மோதல் - பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-02-26 02:35 GMT
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிஏஏ ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும், இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையை, தடுக்க போலீசார்  கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இதனிடையே, ஜாஃப்ராபாத்தில் துவங்கிய இந்த வன்முறை மூன்றாவது நாளாக மௌஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளுக்கு பரவியது. இப்பகுதிகளில், வன்முறையாளர்கள் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களை தீவைத்து கொளுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்