தேரி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்சோரி காலமானார்

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எரிசக்தி மற்றும் ஆதார அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே. பச்சோரி நேற்று காலமானார். அவருக்கு வயது 79.

Update: 2020-02-14 10:48 GMT
கடந்த செவ்வாய் கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையிலேயே காலமானார்.  கடந்தாண்டு மெக்ஸிக்கோவில் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அவருக்கு இருதய அறுவை சிசிக்சை செய்யப்பட்ட நிலையில், உடல் நலிவுற்று காணப்பட்டார். தேரி அமைப்பின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் பச்சோரி. சர்வதேச அளவில் அதற்கென்று தனி இடத்தைபெற்று தந்த பெருமை பச்சோரியையே சாரும் என்று தற்போதைய தேரி அமைப்பின் இயக்குநர் அஜய் மாத்தூர் தெரிவித்துள்ளார். உலக அளவில் போதுமான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் பச்சோரியின் பணி ஈடு இணையற்றதுஎன தேரி அமைப்பின் தலைவர் நிதின் தேசாய் தெரிவித்துள்ளார். பருவநிலை மாறுபாடு தொடர்பான விவாதம் இன்று நடைபெற  ஏதுவான சூழலை ஏற்படுத்தியவர் பச்சோரி எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்