"கர்நாடகாவில் 144 தடை உத்தரவு அமல்"

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு எதிரொலி

Update: 2019-12-18 21:14 GMT
பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம் முழுவதும் நாளை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் மாணவர் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக இன்று காலை 6 மணி முதல் கர்நாடக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்