தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை ஆந்திரா சென்றது எப்படி?
தமிழக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி சேலைகள், ஆந்திராவில் ஜோராக விற்பனை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி சேலைகள், ஆந்திராவில் ஜோராக விற்பனை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகை மற்றும் பேரிடர் காலங்களில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் ஆந்திர மாநிலம், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தல் நடப்பதாக புகார் எழும் நிலையில், வேட்டி, சேலைகள் ஆந்திராவுக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.