சொத்து வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு சிக்கல்

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

Update: 2019-11-01 10:04 GMT
வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவருக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்றும், எம்.பி.யாக இருந்த போதே, சாட்சிகளை கலைக்க அவர் முயன்றதாகவும் சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு விலக்கு அளிக்க இயலாது என கூறி அவரது கோரிக்கையை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். இது முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்