கேரளாவில் முதியவரின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு
கேரளாவில் மலைபாம்பு ஒன்று முதியவரின் கழுத்தை சுற்றி நெருக்கியது.
கேரளாவில் மலைபாம்பு ஒன்று முதியவரின் கழுத்தை சுற்றி நெருக்கியது. காட்டாக்கடை பகுதியில் முட்புதர்களை அகற்றும் பணியில் சிலர் ஈடுபட்டபோது, புதருக்குள் மலை பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட அவர்கள் கோணிப்பைக்குள் பிடித்து அடைக்க முயன்றனர். அப்போது திமிறி எழுந்த மலைப்பாம்பு புவனச ந்திரன் என்பவரது கழுத்தில் சுற்றி நெரித்தது. இதனையடுத்து சக தொழிலாளர்கள், மலைப்பாம்பிடம் இருந்து அவரை மீட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை கொண்டு சென்றனர்.