ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Update: 2019-08-20 13:22 GMT
கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து  305 கோடி ரூபாய்  நிதியை பெற்றது. இதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்திய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இதில்  ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்