தற்போதைய அரசியல் நல்லவர்களுக்கு உகந்தது அல்ல - குமாரசாமி

தற்போது நிலவி வரும் அரசியல் நல்லவர்களுக்கு உகந்தது அல்ல என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-04 07:36 GMT
தற்போது நிலவி வரும் அரசியல் நல்லவர்களுக்கு உகந்தது அல்ல என, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நிலவி வரும் அரசியலிலிருந்து விலக வேண்டும் என, நினைப்பதாக கூறினார். இன்றைய அரசியல், ஜாதி மற்றும் விரோதப் போக்கு ஆகியவற்றை கடைபிடிக்கும் களமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் இளைஞர்களையும் மக்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் குமாரசாமி கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்