ஒரே எண்ணில் போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை என்ற அவசர தொடர்பு மையத்தை தொடங்கி வைத்தார் நாராயணசாமி

புதுச்சேரியில் அவசர அழைப்புகளுக்காக112 என்ற அவசர தொடர்பு மையத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.

Update: 2019-07-26 23:22 GMT
புதுச்சேரியில் அவசர அழைப்புகளுக்காக112 என்ற அவசர தொடர்பு மையத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார். புதுச்சேரி காவல் துறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்க விழா இன்று மாலை நடைபெற்றது. காவல்துறையின் அவசர அழைப்பிற்கு 100, தீயணைப்பு மற்றும் மீட்புக்கு 101, ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 போன்ற அவசர கால எண்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து 112 என்று புதிதாக அவசர தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இதேபோல் காவல்துறைக்கு என தனியாக கணினி குற்றப்பிரிவு மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்