அஞ்சல்துறை தேர்வு - தமிழில் எழுத அனுமதி மறுப்பு : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம்

அஞ்சல் துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார்.

Update: 2019-07-14 11:25 GMT
அஞ்சல் துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளவர்களுக்கு இந்த உத்தரவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். தமிழ் மொழி தெரியாமல், இவ்விரு மாநிலங்களிலும் வேலை செய்வது, பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்று கூறியுள்ள அவர், எனவே மத்திய அரசு இதுதொடர்பான குறிப்பாணையை ரத்துசெய்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் என, தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்