மங்களூருவில் சகதியில் ஆடிப்பாடி பருவமழையை வரவேற்ற மக்கள்

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் உள்ள பவஞ்சே கிராமத்தில் வயல்வெளி தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Update: 2019-06-25 03:45 GMT
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் உள்ள பவஞ்சே கிராமத்தில் வயல்வெளி தினம்  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில், பாரம்பரியமாக ஆண்டுதோறும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழாவின் போதும், மக்கள் வயல் சகதியில் ஆடிப்பாடி, விளையாடி மகிழ்ந்தனர். மேலும், ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்