உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

Update: 2019-06-06 01:51 GMT
புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணியால் ஆன பைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசின் திட்டமான வீடுகளில் சோலார் திடத்தை புதுச்சேரி மக்கள் பயன்படுத்தினால் குறைந்த விலையில்  மின்சாரத்தை கொடுக்க முடியும் என கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்