ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை

புதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

Update: 2019-04-24 03:29 GMT
புதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது. குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த‌தால், ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் படி மருத்துவர்கள் கூறினர். இதற்காக மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழக்கவே, ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்