மத்திய அரசு உத்தரவின் பேரில் சபரிமலையில் தடை உத்தரவு - கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் சபரிமலையில் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதாக ஆதாரத்தை வெளியிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2019-04-21 13:41 GMT
மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் சபரிமலையில் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதாக ஆதாரத்தை வெளியிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.  கண்ணூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட கடிதத்தின் எண்ணை அப்போது குறிப்பட்டார்.  வகுப்பு வாத பிரச்னை ஏற்படுத்துவதற்கு பாஜக முயற்சிப்பதாகவும் இனப்படுகொலைக்கு ஆதரவானவர்களை அழைத்து வந்து கேரளாவில் ஊர்வலம் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார். நேற்று பத்தணந்திட்டையில் அமித்ஷா ஊர்வலத்தில் அமித் ஷா பங்கேற்ற நிலையில், பினராயி விஜயனின் இந்த கருத்து கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்