காங். ஆட்சிக்கு வர துடிப்பதே ஊழல் செய்வதற்குத்தான் - பிரதமர் மோடி கடும் விமர்சனம்

குஜராத் மாநிலம் ஜூனாகாத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

Update: 2019-04-10 11:10 GMT
கர்ப்பிணி பெண்களுக்கான உதவிதொகை, ஏழை குழந்தைகளுக்கான உணவு உள்ளிட்ட திட்டங்களில் காங்கிரஸ் ஊழல் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வர துடிப்பதே ஊழல் செய்வதற்கு தான் என்று கூறிய பிரதமர், கடந்த சில தினங்களில், மூட்டை மூட்டையாக காங்கிரஸ் தலைவர்களிடம் பணம் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே கர்நாடகாவை ஏடிஎம்மாக மாற்றிவிட்ட காங்கிரஸ், ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், மத்திய பிரதேசத்தையும் ஏடிஎம்மாக மாற்றி சுரண்ட தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டினார். இதில் ராஜஸ்தானும், சட்டீஸ்கரும் கூட விதிவிலக்கு அல்ல என்றும் பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்