கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவு

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது

Update: 2019-03-18 10:24 GMT
கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், வெளிநாட்டிலும், டெல்லி எய்ம்ஸிலும் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து,   உடல்நலம் தேறி, சட்டப் பேரவைக்கு வந்த அவர், வழக்கமான பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு உயிரிழந்தார்.இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடல், இன்று காலையில் கோவா தலைநகர் பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு ஊ​ர்வலமாக கொண்டு செல்லப்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்