தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-12-08 03:22 GMT
இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும், தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி, அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். அவர், தனது சொந்த காரணங்களுக்காக கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை, அந்தப் பதவிக்கு மத்திய அரசு நியமித்துள்ளது. இவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றுவார்.
Tags:    

மேலும் செய்திகள்