தொழில்நுட்ப பயன்பாட்டில் இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்

பொருளாதார குற்றம் செய்தவர்கள் மற்ற நாடுகளில் தஞ்சம் அடைவதை தடுக்க சர்வதேச அளவில் இந்தியா சில நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-07 22:50 GMT
டெல்லியில், நாளிதழ் ஒன்றின் 75 வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு வரும் நிலையில், நாட்டை வலுப்படுத்துவதில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். பிரதமர் வீட்டு வசதி திட்டம், எரிவாயு திட்டம், மின்சார திட்டம் போன்ற திட்டங்களை மக்களுக்கு, பாஜக அரசு கொண்டு சேர்த்ததாக அவர் குறிப்பிட்டார்.  இந்தியாவின் வளர்ச்சியை,  உலகம் கூர்ந்து கவனித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா மற்ற வளர்ந்த நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளதாக, தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்