திருப்பதி கோயில் அர்ச்சகர் மீது பெண்கள் தாக்குதல்
திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் மீது பெண்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் மீது பெண்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் அர்ச்சகர்கள் தங்குவதற்காக வடக்கு மாட வீதியில் ஓய்வு விடுதி உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த கல்யாணி, சரோஜா ஆகிய 2 பெண்கள், அர்ச்சகர் மணிகண்ட ஆச்சாரியலுவை திடீரென தாக்கினர். இதையடுத்து, அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மற்றொரு அர்ச்சகரான மாருதி பிரசாத் என்பவர் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மதுசூதனன் என்பவர் மூலம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து, மணிகண்ட ஆச்சாரியலுவை அவமானப்படுத்த, இந்தச் செயலில் ஈடுபட்டதாக