கத்தியால் தாக்கி ரூ7 லட்சம் பறித்து சென்ற திருடன் - வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

பரபரப்பான சாலையில் துணிகர திருட்டு

Update: 2018-10-16 05:43 GMT
புதுச்சேரி மாநிலம் சிவராந்தகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பால சுப்பிரமணியம் என்பவரை ம‌ர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கி 7 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். பட்ட பகலில் பரபரப்பான சாலையில், அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில், தனியார் நிறுவன ஊழியர் பணத்தை காப்பாற்ற நீண்ட நேரமாக திருடனிடம் போராட, சாலையில் சென்றவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். இதுகுறித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்