ஜம்மு-காஷ்மீர் : பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு அழிப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர்.

Update: 2018-10-03 04:06 GMT
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர். தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குத்தார் பகுதியில் உள்ள பக்வா பிளாக் என்ற இடத்தில் இருந்த பயங்கரவாதிகளின் பதுங்கும் குழியை அவர்கள் கண்டுபிடித்தனர். அப்போது அங்கிருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் பத்திரிக்கைகளை அவர்கள் கைப்பற்றினர்.
Tags:    

மேலும் செய்திகள்